மன்னிப்பு கேட்ட புனே அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல்

275

புனேவில் பெய்த கனமழையால் மக்கள் அடைந்த துயரத்திற்கு அம்மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார். புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.  புனே நகரில் உள்ள மகர்பாடா பகுதியில் 11.6 செ.மீ. மழையும், சிவாஜிநகர் பகுதியில் 10.4 செ.மீ. மழையும் பெய்தது.

புனே நகர மக்களுக்கு இந்த மழை நரக வேதனையை கொடுத்தது. இந்நிலையில், கனமழையால் மக்கள் அடைந்த துயரத்திற்கு அம்மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவான திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.