சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் சாலையில் கிடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை சிவராஜ் என்பவர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.