Wednesday, February 18, 2026

‘மேகங்களை தலைக்கு மேல் சுமந்து நிற்கும் கிராமம்!, வைரலாகும் பதிவு!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். எக்ஸ் தளத்தில் மட்டும் அவருக்கு 11.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் பகிரும் பதிவுகள் பலமுறை வைரலாகும் தன்மை பெற்றவை.

சமூக வலைதளங்களில் முக்கிய தகவல்களையும், ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்களையும் பகிர்வது மகிந்திராவின் வழக்கமாகும். அந்த வகையில் தற்போது அவர் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஓர் அற்புதமான கிராமத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், ‘மேகங்களை தலைக்கு மேல் சுமந்து நிற்கும் கிராமம் இது’ என எழுதியுள்ளார். மேலும், இந்தியாவில் இத்தகைய அதிசயமான கிராமங்கள் குறித்து அதிகம் அறியப்படாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கிராமம் “காசி” என அழைக்கப்படுகிறது. இது மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள மாகின்ரூ வட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது, அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள இயற்கை அழகையும், மேகங்கள் சூழ்ந்த காட்சிகளையும் பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோக்கள் அதிகம் ரசிக்கப்படுவதால், மகிந்திராவின் பதிவு வைரலாகி வருகிறது.

https://twitter.com/anandmahindra/status/1972217827449794875

Related News

Latest News