அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய், எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம்தான் தனது கடைசி படம் என்று அறிவித்து இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்து படக்குழுவினர் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.படம் வெளியான விவகாரத்தில், தணிக்கை வாரியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.இதற்கு படத்தின் படத்தொகுப்பாளரே காரணம் என இணையத்தில் குற்றச்சாட்டு வைத்து பலர் பேசி வருகிறார்கள்…
இந்நிலையில், எடிட்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் “இயக்குநர் அமீர் அவருடைய கருத்தைச் சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், அந்த விஷயம் தலைப்பாக வைத்து பகிரப்படும்போது, வேறு மாதிரி திரிந்துவிட்டது. ஆனால், எடிட்டர்தான் காரணம் என்று சொல்வது அவரை மன உளைச்சல் ஆக்கியிருக்கிறது…
போலீஸார் குற்றவாளியை நெருங்கிவிட்டார்கள். கூடிய விரைவில் பிடித்துவிடுவார்கள். ஆனால், அதற்கு முன்பே எடிட்டரை குற்றவாளியாக பதிவிட வேண்டாம். அவருக்கென குடும்பம் இருக்கிறது. இப்படியான விஷயங்களால் அவருடைய குடும்பம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தார் .
மேலும் படத்தொகுப்பாளர்கள் யூனியன் தலைவர் கோபி கூறுகையில்,ரீவொர்க் செய்யலாம் என்று எடுத்துக்கொண்ட வெர்ஷன்தான், இப்போது இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. மற்றபடி, இதை எடிட்டர் செய்திருப்பார் என்று இணையத்தில் சில தகவல்கள் பேசப்படுகின்றன. ஆனால், அது உண்மை கிடையாது. எடிட்டரிடம் தெளிவான படத்தின் பிரின்ட் இருக்கும். அவர் நினைத்திருந்தால், அதையே வெளியிட்டிருக்கலாம். எதற்காக அவர் ‘எடிட்டர் ரெபரன்ஸ்’ என குறிப்பிட்ட பதிப்பை கசியவிட வேண்டும்?.
இந்தத் தருணத்தில் எடிட்டரை காரணமாகச் சொல்வது தவறான விஷயம்” என்றார்.
