அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.
பொங்கல் திருநாள் விடுமுறையில் வெளியாகவிருந்த விஜய்யின் ஜனநாயகன், தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர், லியோ படங்களை ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தெறி படமும் வரும் ஜனவரி 15ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
