ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று, ரீல்ஸ் எடுத்தவர்களுக்கு பாடம்புகட்டிய லாரி ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நெடுஞ்சாலையில் நின்று, ஒரு பெண்ணும் 2 சிறுவர்களும் ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் வந்த வாகனத்தை மறித்த போது, கனரக லாரி ஓட்டுநர் அவர்கள் மீது மோதுவது போல் வந்து விலகி சென்றார். இதனையடுத்து கண்முன்னே மரணத்தை கண்டது போல் ரீல்ஸ் எடுத்தவர்கள் பதறியடித்து ஓடினர்.
