Thursday, December 25, 2025

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீதம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ககன்ராவ் (வயது 29). இவர் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேகனா ஜாதவ். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சமீபகாலமாக இவரது மனைவி எந்த காரணமுமின்றி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ககன்ராவ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் பற்றி தககவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்த ககன்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை தொடர்பாக ககன்ராவின் சகோதரி, கிரிநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது அண்ணனின் சாவுக்கு அவரது மனைவி மேகனா ஜாதவ் தான் காரணம். அவர் திருமணமான நாள் முதல் ககன்ராவை கொடுமைப்படுத்தி மனரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். எனவே மேகனா ஜாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News