Thursday, February 12, 2026

கேரளாவில் கனமழை., வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டெம்போ வாகனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவின் இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அப்போது கூட்டார் நகரத்தின் அருகே ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Related News

Latest News