பருவநிலை மாற்றம் காரணமாக நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நவம்பர் மாதம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்கள் சந்தித்தார்.
இந்த கப்பல் சேவை மூலம் கடந்த ஒராண்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது எனவும் கூறினார். புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நவம்பர் மாதம் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார். டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் கப்பல் இயக்கப்படும் என்று கூறினார்.
