Monday, December 29, 2025

தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது : நடிகை ஐஸ்வர்யா ராய் நீதிமன்றத்தில் வழக்கு

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஐஸ்வர்யா ராயின் பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும் இதுதொடர்பாக இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பல்வேறு நோக்கங்களுக்காக நடிகரின் படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதி ஒத்திவைத்தார்.

Related News

Latest News