Monday, December 29, 2025

துணை குடியரசு தலைவர் தேர்தல் : முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி

துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை குடியரசு தலைவர் தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். அடுத்த துணை குடியரசு தலைவர் யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.

Related News

Latest News