Tuesday, August 19, 2025
HTML tutorial

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை கண்ணகி நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 8 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் இருவரும் அவரது தாயாருடன் வசித்து வருகிறார்கள். இந்த சிறுவர்களின் அப்பா சிறுவர்களின் தாயைவிட்டு பிரிந்து வாழ்கிறார்.

சிறுவர்களின் தாய் விடுமுறை நாட்களில் மகன்களை அவர்களது பாட்டி வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். பாட்டி வீட்டின் அருகில் கோபிநாத் (37) என்பவர் வசித்து வருகிறார் கோபிநாத் சிறுவர்களை பாலியல் தாக்குதல் செய்யும் நோக்கத்துடன் சாக்லெட் தருவதாக கூறி சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று சென்று சிறுவர்களுக்கு ஆபாச படம் காண்பித்து சிறுவர்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இது குறித்து சிறுவர்களின் தாயார் இது குறித்து கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மேற்படி காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு குற்றம் சாட்டப்பட்ட கோபிநாத் குற்றவாளி என நிரூபனமானதால் அவருக்குஇரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து இந்த தண்டனைகளை கோபிநாத் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டசிறுவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News