Friday, August 8, 2025
HTML tutorial

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு : 59 பேர் மாயம்

கடந்த 5-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி கிராமம் முழுமையாக அழிந்தது. அந்த கிராமத்தில் பல்வேறு வீடுகள் வெள்ளம் மூழ்கியது.

வெள்ளத்தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரளி கிராமத்​தின் சாலைகளை சீரமைத்​து, குடிநீர், மின்​சா​ரம், இணைய சேவை​களை மீண்​டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News