Friday, July 18, 2025

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1980 ஆம் ஆண்டு வெளியான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் வேலு பிரபாகரன். அதன் பிறகு அவர் ‘நாளைய மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ‘உத்தமராசா’, ‘அசுரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

இதையடுத்து 1989ல் ‘நாளைய மனிதன்’ படம் மூலம் இயக்குனராக கால் பதித்தார். அந்த படம் ஹிட் ஆனதால் அதன் இரண்டாவது பாகமாக 1990ல் ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news