Friday, June 27, 2025

”உங்களுக்கு பணம் தான் முக்கியம்” Bumrahவை ‘வெளுக்கும்’ ரசிகர்கள்

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 5 சதங்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியை, வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. முன்னதாக 2025ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் இந்தியா தகுதி பெறவில்லை.

இதனால் வருகின்ற 2027ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பும்ரா இல்லாமல் 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா விளையாட உள்ளதாம். முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், 2வது டெஸ்ட் போட்டியை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தும் பும்ராவிற்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ” தயவுசெய்து பும்ராவை, 2ஆவது டெஸ்டில் ஆட வையுங்கள். பும்ரா இல்லை என்றால், இந்தியா 0-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்திக்கும். முதல் இரண்டு டெஸ்டிலும் தோற்றுவிட்டால், அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பே இருக்காது,” என்று எச்சரித்து இருக்கிறார்.

ஒருபுறம் இங்கிலாந்து 2வது டெஸ்டில் ஜோப்ரா ஆர்ச்சரை களமிறக்க, மறுபுறம் இந்தியா ‘ஆயுதம் இல்லாமல் போர்க்களம் செல்வது போல’ பும்ரா இல்லாமல், இங்கிலாந்தை அவர்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” ஒவ்வொரு வீரரும் நாட்டுக்காக எவ்வளவோ தியாகங்களை செய்றாங்க.

ஆனா பும்ரா அணியோட நிலைமை தெரிஞ்சும், இப்படி 2 போட்டியில ஆட மாட்டேன்னு அடம் புடிக்குறாரு.

IPL போட்டியில என்னைக்காவது இப்படி செஞ்சுருக்காரா?, அவருக்கு பணம் மட்டும் தான் முக்கியம்,” இவ்வாறு சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்களும் 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட வேண்டும் என்று, தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news