பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- செய்தியாளர்கள் எந்த கேள்வி எழுப்பினாலும் பதிலளிக்கத் தயார்.
அன்புமணி மன்னிப்பு கேட்பது இங்கு பிரச்சனை இல்லை, நான் தொடங்கிய கட்சியில் நான் கூறியது படிதான் நடக்க வேண்டும்.
என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான்.
பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும்.
கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.