ஜம்மு காஷ்மீரின் பக்ஷி நகர் பகுதியில், ஒரு வாலிபர் ரூ.40,000 பணம் திருடியதாகக் கூறப்படுகிறது. திருடனை கைது செய்த போலீசார் அவரது சட்டையை கழற்றி, கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.