Friday, June 20, 2025

”சப்போர்ட் முக்கியம் பிகிலு” புது கேப்டனை களமிறக்கும் CSK?

IPL தொடரின் 19வது சீசனில் வலிமையாக Comeback கொடுப்போம் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்து இருக்கிறார். தற்போது சென்னை அணி அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

43 வயதாகும் தோனி சென்னை 6வது கோப்பையை வென்ற கையோடு, ஓய்வை அறிவிக்க திட்டமிட்டு உள்ளார். இதனால் 2026ம் ஆண்டில் CSK அணியின் பிளேயிங் லெவனை கட்டமைக்க தோனியும், பயிற்சியாளர் பிளெமிங்கும் தீயாக வேலை செய்கின்றனர்.

இந்தநிலையில் 2026ம் ஆண்டு சென்னை அணி புதிய கேப்டனுடன் களமிறங்க போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தோனி தவிர்த்து CSK கேப்டனாக நியமிக்கப்பட்ட யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் தான் இந்த வயதிலும் அணிக்காக தோனி கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.

இந்த காரணத்தால் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை, அணிக்குள் கொண்டுவர சென்னை அணி தீவிரம் காட்டுகிறதாம். சாம்சனும் மஞ்சள் கோட்டை தாண்டுவது போல சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

இதற்கிடையே சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி அணியில் இருந்து விடுவித்து இருக்கிறது. இதனால் அவரை அணிக்குள் கொண்டுவந்த கையோடு, கேப்டன் பதவியையும் கொடுத்து விடலாம் என்று தோனி கருதுகிறாராம். சாம்சன் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதும், தோனி போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பதும் அவருக்கு பிளஸ் பாயிண்டுகளாக இருக்கின்றன.

சாம்சன் அணிக்குள் வந்தால் பெரும்தொகை அதற்கே போய்விடும். எனவே ருதுராஜை ஏலத்தில் விட்டு மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முடிவில் CSK இருப்பதாகத் தெரிகிறது. கேப்டன் அழுத்தத்தை ருதுராஜால் சமாளிக்க முடியவில்லை என்பதும், இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news