கேதார்நாத் யாத்திரையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ஹரித்வாரிலிருந்து வந்த பக்தர்கள் இரண்டு ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதில் பயணம் செய்துள்ளனர்.
ஆம்புலன்ஸில் பயணம் செய்தால் போலீசார் நிறுத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கையில், அவர்கள் சைரன் ஒலிக்க வைத்து பயணம் செய்துள்ளனர். பல சோதனைச் சாவடிகளை அவர்கள் எளிதாக கடந்து சென்றனர்.
இதனால் சந்தேகமடைந்த சோன்ப்ரயாக் பகுதி போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் நோயாளிக்கு பதிலாக பக்தர்கள் குளிர்சாதன வசதி கொண்ட வாகனத்தில் சிரமமின்றி அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து இரண்டு வாகனங்களும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது; டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.