ரயில்வே துறையில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடர்பாக பெங்களூருவில் உள்ள ரயில்வே தேர்வு வாரியத்திடம் கலந்து பேசி 51 பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அனைத்து மண்டலங்களும் திருத்தி, ஆன்லைன் அமைப்பில் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரம் ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இதைவிட அதிகம் உள்ளது என்றாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ரயில்வே துறையில் ஊழியர்களுக்கு உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.