Monday, June 9, 2025

‘சாட்டையை’ கையில் எடுக்கும் RCB ‘முக்கிய’ வீரர்கள் வெளியேற்றம்?

நடப்பு IPL தொடரில் முதன்முறையாக கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவிக்கிறது. வெற்றிவிழா கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் பலியான சம்பவம் அந்த அணிக்கு கரும்புள்ளியாக மாறிவிட்டது.

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் சின்னச்சாமி மைதானத்தை இடமாற்றம் செய்வோம் என்று முதல்வர் சித்தராமையா அடுத்த இடியை இறக்கியிருக்கிறார். இதனால் சொந்த மைதானத்தை இழக்கும் சூழலுக்கு RCB தள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் IPL மினி ஏலம் மற்றும் Trading ஆகியவற்றை மனதில் வைத்து முக்கிய முடிவொன்றை பெங்களூரு அணி எடுத்துள்ளதாம். அதன்படி நடப்பு தொடரில் சொதப்பிய 5 வீரர்களுக்கு RCB கல்தா கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வெளிநாட்டு வீரர் Liam Livingstone, Devdutt Padikkalக்கு பதிலாக மாற்று வீரராக உள்ளே வந்த Mayank Agarwal, வேகப்பந்து வீச்சாளர் nuwan thushara ஜம்மு காஷ்மீரின் Rasikh Dar மற்றும் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் Lungi Ngidi ஆகியோர் தான் அந்த 5 வீரர்களாம்.

இவர்கள் 5 பேருக்கும் பதிலாக இன்னும் சில ஆல்ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்களை வாங்கிட பெங்களூரு அணி பிளான் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு IPL கோப்பையை வென்றிருப்பதால், நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என, அணி நிர்வாகம் விரும்புவது தான் இதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news