அமெரிக்காவில் சாவரின் ஹெல்த் குரூப் என்ற பெயரில் மருந்து நிறுவனத்தை நடத்தி வருபவர் டன்மாய் ஷர்மா. மனநல மருத்துவராக திகழ்ந்து வரும் இவர் கலிபோர்னியாவில் போதை மறுவாழ்வு மையங்களை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் போலி இன்சூரன்ஸ் மூலம் ரூ.1,282 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தொழிலதிபர் டான்மாய் ஷர்மாவை அதிகாரிகளை கைது செய்தனர். டன்மாய் ஷர்மா அசாம் மாநிலத்தின் கவுகாத்தியை பூர்வீகமாக கொண்டவராவார்.