சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி, சென்னையில் நாளை (03.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பூந்தமல்லி: பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சிநேயர் கோவில் தெரு, வைத்தீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.
பெருங்களத்தூர்: சத்தியமூர்த்தி தெரு, திருப்பூர்குமரன் தெரு, கஸ்தூரிபாய் தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், EB காலணி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.