புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை முழுவதும் சோதனை நடத்தப்பட்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என போலீசார் கண்டுபிடித்தனர்.
மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.