Monday, January 26, 2026

புஷ்பா 2 வசூல் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் ‘புஷ்பா 2: தி ரூல்’ வசூல் குறித்து வழக்கறிஞர் நரசிம்மராவ் இந்த பொதுநல வழக்கை (PIL) தாக்கல் செய்துள்ளார்.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் தெலுங்கு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ‘புஷ்பா 2: தி ரூல்’ மூலம் கிடைக்கும் லாபத்தை சிறிய படங்களுக்கு பட்ஜெட் மானியமாக பயன்படுத்தவும், நாட்டுப்புற கலைஞர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்க வேண்டும் என்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Related News

Latest News