சிதம்பரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து : 30க்கும் மேற்பட்டோர் காயம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுனரின் கவனக்குறைவால் மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News