Monday, June 16, 2025

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். அந்த 3 பேரில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தொடக்கத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரியில், பல்கலைக்கழக வளாகத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news