Wednesday, February 5, 2025

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்

பஞ்சாப் மாநிலம் ஹொசீர்பூரை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். பணியில் இருந்த கிருஷ்ண குமார் நேற்று இரவு தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து வந்த சக வீரர்கள் கிருஷ்ண குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ண குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news