Thursday, August 21, 2025
HTML tutorial

8 ஆண்டுகள் சேமிப்பில் தன் கனவு வாகனத்தை வாங்கிய தினக்கூலி தொழிலாளி !

அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், எட்டு ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்து  இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

கவுகாத்தியின் , போராகான் பகுதியைச் சேர்ந்த உபென் ராய் என்பவர் தினக்கூலி தொழிலாளியாக உள்ளார்.  இரு சக்கர வாகனம் வாங்க  வேண்டும் என்ற கனவில் 2014-ம் ஆண்டு முதல் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மதிப்புள்ள நாணயங்களை சேமித்து வந்தார்.

இந்நிலையில் , அவற்றின் கனவு இருசக்கர வானத்தை வாங்கும் அளவிற்கு சேமிப்பு வந்த உடன் , அவர் சேமித்த பணத்தை அதாவது  அனைத்தும் நாணயங்களாகவே உள்ளது , நாணயங்களை  சாக்குப்பையில் எடுத்து  சென்று அருகில் ஷோ ரூமில் தன் கனவு வாகனத்தை வாங்கி உள்ளார்.

தன்னம்பிக்கையுடன் இலக்கை அடையவேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாக சேமித்து கனவை நிறைவேற்றியுள்ளார். இவரின் செயல் பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது. அவர் சேமித்த  மொத்த நாணயங்களின் மதிப்பு  ரூ. 1.5 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News