Wednesday, July 30, 2025

சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் தகராறு – 5 பேர் கைது

மறைமலைநகரில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த உரிமைநாதன் என்பவர், பாவேந்தர் சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இங்கு கடந்த 23ம் தேதி வந்த 2 இளைஞர்கள், பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்ல முயன்றுள்ளனர்.

பணம் கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் 3 நண்பர்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சச்சின், சந்துரு, சூர்யா,தினேஷ் மற்றும் சுபீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News