சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 45). இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் திருப்புவனத்தில் இருந்து மானாமதுரைக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். அப்போது அவருடைய பர்சில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
