ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் ஒன்றின் பின் ஒன்றாக உயிரிழந்த சோகம்

253
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் கருளியில் 25 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதுஷ்டவசமாக 5 குழந்தைகளுக்கும் ஒன்றின்பின் ஒன்றாக உயிரிழந்தது.

திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த ரேஷ்மா-ஆஷ்க் தம்பதிக்கு சமீபத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் எனினும் தாய் நலமுடன் இருந்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் ஜே.கே.லான் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் , 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் வழியிலேயே உயிரிழந்தது எனவும் மேலும் ஒரு பெண் குழந்தை ஜெய்ப்பூர் மருத்துவமனை அடைந்த பின் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.