உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண் நெடுஞ்சாலையின் நடுவில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் பொது இடத்தில் ஆயுதத்தை காட்டி நடனமாடும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்துள்ளது.