அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
கடந்த 2020 ஆண்டு கொரோனா பரவிய போது உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதத்தை கடுமையாக விமர்சித்தார். டிரம்பின் இந்த உத்தரவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் நிதியை இழக்க உள்ளது.