Friday, June 6, 2025

ஷ்ரேயாஸ்க்கு ‘Captain’ பதவி கிடைக்குமா? உண்மையை ‘உடைத்த’ முன்னாள் வீரர்

BCCI – ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடையிலான பகை, 2 வருடங்கள் கழித்தும்கூட இன்னும் தீரவில்லை. காண்ட்ராக்டில் மீண்டும் சேர்த்துக் கொண்டாலும் கூட, இந்திய அணியில் அவருக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் IPL தொடரில் கேப்டனாக பஞ்சாப் அணியை வழிநடத்தி, இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றுள்ளார்.

IPL தொடரில் நன்றாக ஆடிய வீரர்களுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் BCCI வாய்ப்பளித்துள்ளது. ஆனால் 604 ரன்கள் குவித்தும், ஷ்ரேயாஸ்க்கு இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விமர்சனங்களுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், நான் தேர்வுக்குழுவில் இல்லை என்று Escape ஆகிவிட்டார்.

இந்தநிலையில் எதிர்கால இந்திய அணியை, ஷ்ரேயாஸ் கேப்டனாக வழி நடத்துவாரா? என்னும் கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ” சுப்மன் கில் கேப்டனாக இருக்கும்போது, ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாமா என்று பேசினால், அது கில்லின் கேப்டன்ஸியைதான் பாதிக்கும்.

இதனால் தேவையில்லாத அழுத்தங்களை கில் சந்திக்க வாய்ப்புள்ளது. தற்போது நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். கில்லுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கக் கூடாது. ஷ்ரேயாஸ் தற்போது இந்திய அணியிலேயே இல்லை. அப்படி இருக்கும்போது தற்போது அவர்குறித்து ஏன் பேச வேண்டும்?” என்று பதில் அளித்துள்ளார்.

கவாஸ்கரின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது, ஷ்ரேயாஸ்க்கு இனி இந்திய அணியில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே தெரிகிறது. என்றாலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மிஸ்டர் 360 என புகழப்படும் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் என்று, உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரும் ஷ்ரேயாஸின் ஆட்டத்தை புகழ்ந்து, BCCIக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

எனவே விரைவில் இந்திய அணியிலும், ஷ்ரேயாஸ்க்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஷ்ரேயாஸின் திறமை? BCCIன் பிடிவாதம்? இரண்டில், எது ஜெயிக்கப் போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news