Tuesday, August 19, 2025
HTML tutorial

கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனிடம் பேசிய மனைவி

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ராகுல், நான்கு மாதங்களுக்கு முன்பு 17 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண், யுவராஜ் என்ற இளைஞருடன் காதலில் இருந்தார். திருமணத்திற்கு பிறகும் அந்த உறவை ரகசியமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், யுவராஜுடன் சேர்ந்து தனது கணவனை அழிக்கத் திட்டமிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராகுலுடன் பைக்கில் சென்றபோது செருப்பு கழன்றதாக கூறி பைக் நிறுத்தச் சொன்னார். ராகுல் இறங்கியதும், அருகே பதுங்கியிருந்த யுவராஜின் நண்பர்கள் இருவர், அவரை பீர் பாட்டிலால் தாக்கி, உடைந்த பாட்டிலால் 36 முறை குத்தி கொலை செய்தனர்.

பின்னர், ராகுலின் மனைவி, யுவராஜிடம் வீடியோ காலில் அவரது சடலத்தை காட்டி, உடலை வயலில் தூக்கி எறிந்து, யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் தலைமறைவானார். உறவினர்கள் புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி நால்வரையும் கைது செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News