மும்பைக்கு எதிராக குஜராத் தோல்வி அடைந்ததற்கு, அந்த அணியின் மோசமான பீல்டிங்கும், சுமாரான விக்கெட் கீப்பிங்குமே முக்கியக் காரணமாகும். கேப்டன் Shubman Gill ஒற்றை ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், சாய் சுதர்சனும் – சுந்தரும் அபாரமாக ஆடி இலக்கைத் துரத்தினர்.
ஆனால் பும்ராவின் 14வது ஓவர் குஜராத்தின், கோப்பை கனவைக் கலைத்து விட்டது. இந்தநிலையில் குஜராத் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு, சொந்த அணி வீரர்களே காரணமாகி இருக்கின்றனர். இதனால் மும்பை அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறி விட்டது.
குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான Kusal Mendis, மும்பை வீரர்கள் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கொடுத்த Catchகளை தவறவிட்டு விட்டார். கீப்பிங்கில் தான் இப்படி செய்தார் என்றால், பேட்டிங்கில் இதற்கு மேலும் சொதப்பி விட்டார்.
ஒன்டவுனாக இறங்கிய Kusal Mendis 20 ரன்னில் இருந்தபோது, Mitchell Santner வீசிய பந்தில் Hit Wicket முறையில் ஆட்டமிழந்தார். இறங்கி அடிக்கிறேன் என்ற பெயரில் காலை பின்னால் வைத்து, தன்னைத்தானே Stumping செய்து கொண்டார்.
இதேபோல பார்மில் இல்லாத தென் ஆப்பிரிக்க பவுலர் Gerald Coetzeeக்கு, கேப்டன் கில் 3 ஓவர்கள் வழங்கியதும் தோல்விக்கு அடுத்த காரணமாகும். அவரின் ஓவரில் மட்டும் மும்பைக்கு சுளையாக 51 ரன்கள் கிடைத்தன.
அதேநேரம் நல்ல பார்மில் இருக்கும், ஆல்ரவுண்டர் Wasington Sundarக்கு கில் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசக் கொடுத்தார். இந்த போட்டியில் மும்பை ஓபனர் ரோஹித் சர்மா கொடுத்த 4 Catchகளையும், குஜராத் வீரர்கள் அடுத்தடுத்து கோட்டை விட இதைப் பயன்படுத்தி, அவர் 81 ரன்கள் குவித்து விட்டார்.
இல்லையெனில் 150 ரன்களுக்கே அந்த அணி சுருண்டிருக்கும். IPL தொடரைவிட்டு குஜராத் வெளியேறியதற்கு கில்லின் மோசமான கேப்டன்ஷியும், சொந்த வீரர்களின் அஜாக்கிரதையுமே முக்கியக் காரணங்களாகி இருக்கின்றன. ஆக மொத்தம் குஜராத் டைட்டன்ஸ், சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளது.