குஜராத்துக்கு எதிரான போட்டியில் வென்றபிறகு, CSK கேப்டன் தோனி பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். தன்னுடைய ஓய்வு குறித்து பேசும்போது, ” இது எங்களுக்கு நல்ல சீசன் கிடையாது.
சரியாக ஆடவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவித்தால், சிலரெல்லாம் 22 வயதிலேயே Retire அறிவிக்க வேண்டியிருக்கும். பேருந்தில் எனதருகே அமர்ந்திருந்த இளம்வீரர் Andre Siddharthடம் வயது என்ன? என்று கேட்டேன்.
உங்களைவிட 25 வயது குறைவு என்றார். அதேபோல வைபவ் சூரியவன்ஷி காலில் விழுந்தபோதும், வயது குறித்து கவலை எழுந்தது. மிகவும் வயதானவனாக உணர்கிறேன். சென்னை அணியில் இன்னும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டியதுள்ளது.
முதலில் ராஞ்சி சென்று Bike Ride செல்ல வேண்டும். அதற்குப்பிறகு தான் ஓய்வு குறித்து சிந்திக்க இருக்கிறேன். என்னுடைய ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது, ” என்றார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் , ” யார் அந்த சில பேர்? ஓப்பனா பேர சொல்லி இருக்கலாமே” என்றும், மற்றொரு தரப்பினர், ” ரோஹித்தா? இல்ல கோலியா? தோனி யாரை சொல்றாரு?”, என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் தோனி, கோலி, ரோஹித் மூவரின் ரசிகர்களுக்கும், தற்போது சமூக வலைதளங்களில் முட்டிக் கொண்டு விட்டது. நடப்பு சீசனில் பெங்களூரு, மும்பை அணிகள் Play Offக்கு சென்று விட்டன. ஆனால் சென்னையோ 10வது இடத்தில் கிடக்கிறது. ரசிகர்களின் சண்டைக்கு இதுவும் முக்கிய காரணமாக மாறியுள்ளது.