Saturday, June 28, 2025

‘கேப்டனை’ விட்டு தரோம் ஆனா CSKக்கு ‘செக்’ வைக்கும் RR?

சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா? இல்லையா? என்பது தான், IPL வட்டாரத்தில் லேட்டஸ்ட் Hot Topic. ருதுராஜ் தலைமையில் சென்னை பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

என்றாலும் சென்னையின் சரிவினை, அவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு அணியின் பிளேயிங் லெவனை கட்டமைக்க முடியாததே முக்கிய காரணமாகும். இதையடுத்து தொடரின் பாதியில் இளம்வீரர்களை அணியில் எடுத்து ஓரளவு பேட்டிங் ஆர்டரை வலிமையாக மாற்றினர்.

இதற்கிடையே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான், சென்னைக்கு ராசி என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு CSK வலை விரித்தது. அணிக்குள் நடந்த உள்குத்து கலவரங்களால் மனக்கசப்பில் இருந்த சாம்சனுக்கும் இது நல்ல ஆபராகவே பட, மஞ்சள் கோட்டை தாண்டுவது போல போஸ்ட் போட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.

இந்தநிலையில் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் 2 வீரர்களை கேட்கிறதாம். ரவிச்சந்திரன் அஸ்வின், சிவம் துபே இருவரும் தான் அந்த வீரர்களாம். 18வது IPL தொடரில், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 18 கோடி கொடுத்து, ராஜஸ்தான் தக்க வைத்திருந்தது.

அவருக்கு பதிலாக அஸ்வின், துபேவை வாங்கினால் கூடுதலாக, 3 கோடியே 75 லட்சம் ரூபாயை ராஜஸ்தான் சென்னைக்கு கொடுக்க வேண்டியது இருக்கும். சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்தை அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன் இருவரும் ராஜஸ்தானில் இல்லை. அத்தோடு மேற்கண்ட இருவரும் ராஜஸ்தான் அணிக்காக ஏற்கனவே விளையாடிய வீரர்கள் தான்.

எனவே வீரர்கள் Trading குறித்து இரு அணிகளும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news