இடைத்தேர்தல் – முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி

514

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த சட்ப்பேரவை தேர்தலில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார்.

இருப்பினும், பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்தநிலையில், அவரை மாநில முதல்வராக்க கட்சித் தலைமை முடிவு செய்தது.

இதையடுத்து, தொடர்ந்து அவர் இரண்டு முறையாக உத்ரகாண்ட் முதல்வராக பதவி ஏற்றார்.

அவ்வாறு பதவி ஏற்ற நிலையில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்ஏவாக அவர் தேர்வாக வேண்டும்.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் சம்பாவத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் கைலாஷ் கெடோரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், காலியான அந்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் புஷ்கர் சிங் தாமி போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.