Saturday, July 5, 2025

5 கிலோ கஞ்சாவை வீட்டில் வைத்திருந்த இரண்டு பேர் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நெற்குன்றம், செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்று சோதனை செய்தபோது அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் தங்கியிருந்த விஜய் மற்றும் சிவா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news