- சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் 71 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை.
- இரட்டை இலக்க தொகுதிகளை திமுகவிடம் கேட்க வேண்டும் என பொதுக்குழுவில் மட்டுமே பேசினோம், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்.
- மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் விவகாரத்தில் மராட்டிய அரசு மீண்டும் பணிந்ததாக எம்.பி.சு.வெங்கடேசன் விமர்சனம். “இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது” என்றும் சமூக வலைதளத்தில் பதிவு.
- திருப்புவனத்தில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம். காவலாளி அஜித் மரணத்திற்கு காரணமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்.
- சிவகங்கை அருகே நவத்தாவு கிராமத்தில் விமரிசையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா. போட்டி போட்டு மகிழ்ச்சியாக மீன்களை பிடித்துச் சென்ற கிராம மக்கள்.
- பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக கிராம மக்கள் முடிவு. ஆயிரத்து 100 நாள் போராட்டங்களை நடத்தியும் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருவதாக குற்றச்சாட்டு.
- முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுமையாக உபரிநீராக வெளியேற்றம். 16 கண் மதகு வழியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரின் கழுகு பார்வை காட்சிகள் வெளியீடு.
- சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு. காயத்துடன் மீட்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை.
- பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் 38 பேர் உயிரிழந்ததாக தகவல். வெள்ளத்தில் சிக்கத் தவித்த நூற்றுக்கணக்கானோா் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைப்பு.
- அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் காட்டுத்தீயை அணைத்துகொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு. 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
Today Headlines News in Tamil : இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற பாஜக முயற்சி, தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்
Follow on Google News