அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.
