நடப்பு IPL தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Qualifier 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இதனால் ஒட்டுமொத்த RCB ரசிகர்களுமே கொண்டாடிக் கொளுத்தி வருகின்றனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ஏரியாவிலும் பெங்களூரு, கில்லி போல சொல்லி அடிக்கிறது. என்றாலும் பஞ்சாப்புக்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது.
Eliminator போட்டியில் வென்று வரும் அணியுடன் பஞ்சாப் அணி மோதும். இதில் எந்த டீம் வெல்கிறதோ அந்த அணியே பெங்களூருடன், பைனலில் விளையாடும். அதுவரை RCB கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.
இந்தநிலையில் கடந்த 7 சீசன்களாக IPL கோப்பையை வென்ற அணிகளுக்கு, இடையில் ஒரு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 2018ம் ஆண்டில் இருந்து Qualifier 1 போட்டியை வெல்லும் அணியே, IPL கோப்பையையும் வென்றுள்ளது.
கூடுதல் போனஸாக ஆஸ்திரேலிய வீரர் Josh Hazlewood, இதுவரை எந்தவொரு Final போட்டியிலும் தோற்றது இல்லையாம். மேற்கண்ட புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த வருடம் RCB, IPL கோப்பையை கையில் ஏந்துவதற்கான எல்லா அறிகுறியும் தெரிகிறது.
என்றாலும் பெங்களூருக்கு முன்னால் இந்த புள்ளிவிவரங்கள் செல்லுபடியாகுமா? இல்லையா? என்பதை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.