Tuesday, May 13, 2025

ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறியுள்ளது.

Latest news