Wednesday, May 14, 2025

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து : 7 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசிங்கம். விவசாயியான இவர் பர்மா காலனி என்ற இடத்தில் 2 இடங்களில் கொட்டகை அமைத்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார்.

இங்கு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதில் 2 கொட்டகைகளும் எரிந்து, கோழிகள் உடல் கருகி உயிரிழந்தன. இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

Latest news