தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
