Saturday, June 7, 2025

உற்சாகத்தில் ரயில் பயணிகள்!

சென்னை முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில்  கடற்கரை-தாம்பரம் வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள்  செங்கல்பட்டு வரை நீட்டிக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வந்தன.  

தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு இந்த 3வது பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் இடையே 11.07 கி.மீ தூரத்துக்கு  ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

 இந்த பாதையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மாலை 4.30 மணிக்கு  மின்சார ரயில் இயக்கப்பட்டது.

இதன் பிறகு அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில்  தாம்பரத்தில் இருந்து 3வது வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

முழுமையாக இந்த பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news