இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சமீப காலமாக அடிவயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக குடலிறக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ள அவர் நலமுடன் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் களத்திற்கு திரும்ப காத்திருக்க முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.