Sunday, June 1, 2025

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப் – இன்ஸ்பெக்டர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (54). சிறப்பு காவல் ஆய்வாளராக பணி புரியும் இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் மோகன் ராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

புகாரின் பெயரில் அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் போலீசுக்கு சக போலீசே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news